தலித் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்
தரங்கம்பாடி, அக்.29- நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகேயுள்ள டி.மணல்மேடு கிராமத்தில் சாலையில் சென்ற தலித் இளைஞர்கள் 3 பேரைச் சாதியைச் சொல்லிக் கேவலமாகத் திட்டியதோடு 15 க்கும் மேற்பட்ட சாதி ஆதிக்க இளைஞர்கள் சேர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். டி.மணல்மேடு கிராமம் ரயில்வே கேட் அருகேயுள்ள பேருந்து நிறுத்த த்தில் அதே பகுதியில் வசித்து வரும் ராமச்சந்திரன் மகன் பாலாஜி(27), பாலு மகன் முருகன், நடராஜன் மகன் சரவணன், மோகன் மகன் கார்த்திக் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் மது அருந்தியுள்ளனர். அந்த வழியாகத் திருக்கடையூரில் இருந்து வீட்டிற்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த தலித் இளைஞர்களான வசந்த்குமார்(20), ரவி(24), மணிகண்டன்(21) ஆகியோரைப் பார்த்துச் சாதியைச் சொல்லி மிகக் கேவலமான ஆபாச வார்த்தை களைப் பயன்படுத்திப் பேசியதோடு அவர்களைச் சுற்றி வளைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது குறித்து அவ்வழியாக வந்த ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரிடம் தலித் இளைஞர்கள் முறையிட்டும் அவர் கண்டு கொள்ளாததோடு, அவரின் தம்பியும் அவர்களோடு சேர்ந்து கடுமையாகத் தாக்கி யுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகச் சிபிஎம் கோட்டையாக இருந்த டி.மணல்மேட்டில் சாதி வேறு பாடின்றிக் கோவில் திருவிழாக்க ளை ஒற்றுமையாக நடத்திய மக்க ளைப் பிரித்து, 2011 உள்ளாட்சி தேர்தலின் போது அதுவரை மார்க்சிஸ்ட் கட்சியினரே ஊராட்சி தலைவராக இருந்து வந்த நிலை யில் அதிமுக பிரமுகர் ஒருவர் தில்லு, முல்லு வேலை செய்து தலை வரானார். அதுவரை சாதியை மறந்து ஒற்றுமையாக இருந்த மக்களைச் சாதி ரீதியாகப் பிரிக்கும் வேலை களைச் செய்து, தகராறுகளையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறார் எனக் குற்றஞ்சாட்டும் தலித் மக்கள் இந்தத் தகராறையும் அவர் தான் ஏற்படுத்தியுள்ளார் என்றும் கூறுகின்றனர் தனது அரசியலுக்கா கச் சாதி பிரச்சனைகளை ஏற் படுத்தும் அவர் மீதும், தலித் இளை ஞர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய சாதி ஆதிக்க வெறியர் மீதும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென டி.மணல் மேடு கிராம மக்கள் வலியுறுத்தி யுள்ளனர். இச்சம்பவம் குறித்துப் பொறை யார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூா் சிறையில் முருகன், நளினி உண்ணாநிலை
வேலூர், அக். 29- வேலூா் மத்திய சிறையில் உண்ணாநிலை யில் ஈடுபட்டுள்ள முருகனின் உடல்நலன் மீது சிறை நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள நளினி சனிக்கிழமை அதிகாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞா் புக ழேந்தி தெரிவித்தார். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உட்பட 7 போ் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில், வேலூர் மத்திய சிறையில் முருக னும், பெண்கள் தனிச்சிறையில் நளினியும் சிறை தண்டனை அனுபவித்து வரு கின்றனர். இந்நிலையில், சிறையில் நளினி சனிக்கிழமை காலை 6 மணி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கி இருப்பதாக அவரது வழக்கறிஞா் புகழேந்தி தெரிவித்தார். வேலூர் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கடந்த 18ஆம் தேதி செல்போன் கண்டு பிடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாகாயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து முரு கன் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த அறையில் இரண்டு தினங்களுக்கு பின் நடத்தப்பட்ட சோதனையில் சிம்கார்டு கைப் பற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து, முருகனுக்கு அளித்து வந்த சலுகைகளை சிறை நிர்வாகம் ரத்து செய்தது. இந்த தொடா் நடவடிக்கைகளால் மனஉளைச்சலுக்கு ஆளான முருகன் கடந்த 20ஆம் தேதி முதல் சிறையில் உண்ணா நிலை இருந்து வருகிறார். உண்ணாநிலை இருந்து வரும் முரு கனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. முருகன், நளினி விடுதலை குறித்து பேச்சு எழுப்பப்படும் போதெல்லாம் அவருக்கு எதி ராக சிறை நிர்வாகம் பல்வேறு இடையூறு களை செய்து வருகிறது. இதன் உண்மை நிலையை விசாரித்து முருகனுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என வழக்கறிஞர் கூறினார்.