tamilnadu

நாகை மாவட்டம் அளக்குடி பள்ளி முப்பெரும் விழா

சீர்காழி, ஏப்.13-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு விழா,ஆண்டு விழா, பள்ளியின் 69 ஆவது வருட விழா ஆகியமுப்பெரும் விழா நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் செல்வம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாலு வரவேற்றார். சீர்காழி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் நற்குணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூங்குழலி, பள்ளிச் செயலர் ரமேஷ்முன்னிலை வகித்தனர்.வட்டார கல்வி அலுவலர் பாபு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிபேசினார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வேலழகன்,வி.ஏ.ஓ பார்த்திபன், முன்னாள் ஆசிரியர் கூட்டுறவு சங்கத் தலைவர் கமலநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் மணிவண்ணன், இலக்கிய மன்றபொறுப்பாசிரியர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் திருமுருகன் நன்றி கூறினார்.

;