தரங்கம்பாடி, மே 30- நாகை மாவட்டம், செம்ப னார்கோவில் அருகேயுள்ள பரசலூர் கிராமத்தில் தன்னு டைய சொந்த உழைப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்த முதியவர் ஒருவரை குடும் பத்தினரே வீட்டை விட்டு வெளி யேற்றி அவர் பெயரிலுள்ள சொத்துக்களை அபகரித்ததால் தங்க இடமின்றி பேருந்து நிறுத் தங்களில் அவர் தங்கும் கொடுமை நிகழ்ந்துள்ளது. பரசலூர் மெயின் ரோடு, மேலக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (73), தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றிய இவர் பிறகு சவுதி, துபாய் போன்ற வெளிநாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரத் துறையில் பணி செய்துள்ளார். 2019 வரை வயது முதுமையையும் பொருட்படுத்தா மல் வேலை செய்து 75 லட்சம் மதிப்பில் பெரிய மாடி வீடு, கடை வீதியில் வணிக வளாகம் மற்றும் 2 கோடி மதிப்பிலான இடங்க ளையும் தனது சொந்த உழைப் பில் வாங்கி சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார்.
இதனிடையே அவரது பெயரி லுள்ள ஒட்டு மொத்த சொத்துக்க ளையும் அவரது மனைவி குமாரி (60), மகன்கள் கலைச்செல்வன், ரத்தினவேல் மகள்கள் மகா லெட்சுமி, கோமதி ஆகியோர் தங்கள் பெயரில் எழுதி தருமாறு மிரட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், காவல்துறை என அனைவரிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் உண்ண உணவின்றி சொந்த வீட்டிலேயே ஆதரவற்றவராய் இருந்த அவரை சில நாட்களிலேயே அவரது குடும்பத்தினர் வீட்டிலிருந்து விரட்டி அடித்துள்ளனர். தங்க வீடின்றி பேருந்து நிறுத்தங்களிலும், சாலை யோரங்களிலும் தங்கி வரு கிறார். 52 ஆண்டுகள் எந்தவித ஆடம்பர செலவும் செய்யாமல் இரவு- பகலாக வெளிநாடுகளில் சம்பாதித்து வீடு கட்டி, நிலங்கள் வாங்கி சொத்துக்களை சேர்த்து வைப்பதிலேயே குறிக்கோளாக இருந்த என்னை நான் கட்டிய வீட்டிலிருந்தே அடித்து வெளி யேற்றி விட்டனர் என கதறி அழு தார்.
மாவட்ட நிர்வாகம் தனது சொத்துக்களை தனது குடும்பத்தி னரிடமிருந்து மீட்டு தருவதோடு, உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டுமென கூறியுள்ளார். சொந்த மனைவி, பிள்ளைகளா லேயே பல கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்து வைத்த வர் வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்ட சம்பவம் அப்பகுதி மக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.