tamilnadu

img

மோட்டார் வாகனத் தொழிலை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்காதே! நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக.29- மோட்டார் வாகனத் தொழிலைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும்  சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு மோட்டார் வாகனத் தொழில் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில், நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி விளக்கவுரையாற்றினார். மோட்டார் வாகனத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அர்.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் சு.சிவகுமார், ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.வி.மகேந்திரன், அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சு.மணி மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.