கொள்ளிடம், மார்ச் 15- நாகை மாவட்டம் சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் மாதிரவேளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணி மாறன் தலைமையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப் பட்டது. சுகாதாரப் பணி யாளர்கள், தண்ணீர் தேங்கி யுள்ள பகுதிகள் மற்றும் கொசு உற்பத்தியாகும் பகுதி களை கண்டறிந்து கொசு மருந்துகளை தெளித்து கொசுக்களையும், கொசுப் புழுக்களையும் அழித்தனர். மேலும் தெருக்களில் கிடந்த டயர்கள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த பாட்டில்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு சுகாதார பணியாளர்கள் சார்பில் கிராம மக்களுக்கு நலக்கல்வி அளிக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சந்திர சேகர், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.