சீர்காழி, ஜூலை 18- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரிலிருந்து பழையாறு மீன் பிடி துறைமுகம் செல்லும் நெடுஞ்சாலையில் கொப்பியம் கிரா மத்தில் சாலையோரம் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு கடந்த 2 மாதங்க ளாக உள்ளது. சாலையின் ஓரத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் சைக்கி ளில் செல்லும் பள்ளி மாணவர்கள் அடிக்கடி இந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் வாக னங்கள் எதிரே வரும் போது இரு சக்கர வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு களின் வெளிச்சம் பிரகாசமாக இருப்ப தால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சாலையோர பள்ளத்தில் விழுந்து அடிபடுகின்றனர். அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நடந்து செல்லும் முதி யவர்கள் மற்றும் பெண்களும் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே விபத்துக்கு காரணமாக நெடுஞ்சாலையின் ஓரம் கொப்பியம் கிராமத்தில் உள்ள உடைப்பை உட னடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.