tamilnadu

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவ அறிவுறுத்தல்

நாகப்பட்டினம், ஜூலை 13- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், ராதாமங்கலம் ‘பி’  கிளை சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புக்  கூட்டம் நடைபெற்றது. பி.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.  கட்சியின் கிளைச் செயலாளர் எஸ்.மோகன்இங்கர்சால் வர வேற்றார். கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகைமாலி, மாநி லக் குழு உறுப்பினர் வி.மாரிமுத்து பேசுகையில், “மார்ச் 24  முதல் கொரோனா ஊரடங்கு காலம் நிலவி வருகிறது. ஏழை  எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டி ருக்கிறார்கள். இந்த நேர்த்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னணி உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்க பலமாக நின்று, அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்”  என கேட்டுக் கொண்டனர்.