tamilnadu

img

செம்பனார்கோவில் ஒன்றியத் தலைவர் நந்தினி ஸ்ரீதர்

தரங்கம்பாடி, ஜன.12- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிரணியை சேர்ந்த நந்தினி ஸ்ரீதர் வெற்றி பெற்றார். ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் நந்தினி ஸ்ரீதர் 21 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நந்தினி ஸ்ரீதருக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா. எம்.முருகன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

;