tamilnadu

img

அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநாட்டு வரவேற்புக்குழுக் கூட்டம்

நாகப்பட்டினம், மே 16-தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்(சிஐடியு) சங்க 16-வதுமாவட்ட மாநாடு வரும் ஜூலை 1,2 ஆகியஇரு நாட்கள் நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதன் வரவேற்புக்குழுக் கூட்டம், வியாழக்கிழமை மாலை நாகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி தலைமை வகித்தார்.சங்க நாகைக் கிளைத் தலைவர் ஏ.பஞ்சநாதன், பொருளாளர் கே.ஐயப்பன், துணைத்தலைவர்கள் ஆர்.திருச்செல்வம், கே.சி.லெட்சுமணன், ஜி.அருள், வி.ஜூபிலி, துணைச்செயலாளர் ஜி.ஞானதுரை ஆகியோர்முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். கெளரவத் தலைவர் தஞ்சை ஆர்.மனோகரன் சிறப்புரையாற்றினார்.சங்கப் பொதுச் செயலாளர் கே.தாமோதரன், தலைவர் பி.முருகன், பொருளாளர் கே.தாமோதரன், துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.வைத்திலிங்கம், கே.ராமமூர்த்தி, ஏ.கோவிந்தராஜ், எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் சு.சிவகுமார்,சு.மணி, பி.செல்வராஜ், வி.பாலசுப்பிரமணியன், எம்.குருசாமி, எல்.பி.வசந்தி, ஆர்.ரவீந்திரன், கே.தங்கமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டை சிறப்புற நடத்திட அனைத்துத் தோழர்களும் பாடுபடுதென முடிவெடுக்கப்பட்டது. கிளைச் செயலாளர் எம்.பரமசிவம் நன்றி கூறினார்.