tamilnadu

அரசு இரு சக்கர வாகனம் பெற காலக்கெடு நீட்டிப்பு

நாகப்பட்டினம், அக்.28- தமிழக அரசு சார்பில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கிழ், 2019-20 ஆம் ஆண்டிற்கான  பயனாளிகளைத் தேர்வு செய்திட ஏற்கனவே 20.09.2019 முதல், 23.10.2019 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்றுப் பரிசீலனை செய்து, பயனாளிகளைத் தேர்வு செய்திட 05.11.2019 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்குத் தகுதியானவர் யார்? பணிபுரியும் மகளிராக இருக்க வேண்டும்;8-ஆம் வகுப்புத் தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும்; வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். தனிநபர் வருமானம் இரண்டரை லட்சத்திற்குள் இருக்கவேண்டும். அரசு மானியம் பெற, ஓட்டுநர் உரிமம் பெற அவசியம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.