சீர்காழி, மார்ச் 11- நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சில விவசாயிகளுக்கு மட்டும் மறைமுகமாகவும், பார பட்சமாகவும் ரகசியமாகவும் வேளாண் பொறியியல் துறை சார்பில் இலவசமாகத் கைதெளிப்பான் வழங்கப்ப ட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயி களுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் ஆளும் கட்சி சார்பில், பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு பாரபட்சமாகவும், மறை முகமாகவும் வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் பயிரில் பூச்சி மருந்து தெளிக்கப் பய ன்படுத்தப்படும் இலவச கைத்தெளிப்பான்கள் திங்களன்று வழங்கப்ப ட்டுள்ளன. மானிய விலையில் விவ சாயிகளுக்கு டீசல் என்ஜின், மின்மோட்டார் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் அரசு சார்பில் விவசாயி களுக்கு வழங்கப்பட்டு வரு கின்றன. இது குறித்து விவ சாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் வெளிப்படையாக அறிவிப்பு செய்யப்பட்டு, பின்னர் விவசாயிகளின் பயனாளி கள் பட்டியல் தயார் செய்ய ப்பட்டு, உரிய ஆய்வுக்குப் பிறகு பயனாளிகளுக்கு விவ சாய உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கு வது வழக்கமாக இருந்து வரு கிறது. ஆனால் விவசாயி களுக்கு எந்த அறிவிப்பும் தராமல் வேளாண் பொறி யியல் துறை செயல்பட்டு வருவது வருந்தக் கூடியதாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே பாரபட்சமாக ஒரே கட்சியைச் சேர்ந்த வர்களுக்கு வேளாண் பொறி யியல் துறை மறைமுகமாக கைத்தெளிப்பான் வழங்கி யது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சிய ருக்கு கோரிக்கை விடுத்து ள்ளதாக விவசாயிகள் தெரி வித்துள்ளனர்.