சீர்காழி, அக்.31- சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் மயானத்திற்குச் செல்ல பொறை வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தி ற்கான மயானத்திற்குச் செல்ல பொறை வாய்க் காலை கடந்து தான் செல்ல வேண்டும்.கடந்த 25 ஆண்டு களுக்கு முன்பு பொறை வாய்க்கால் குறுக்கே கட்டப் பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் நடைபாலத்தின் வழியே இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு இக் கிராம மக்கள் சுமந்து சென்றனர். இந்த நடைபாதை கான்கிரீட் பாலமும், சில மாதங்களுக்கு முன்பு உடை ந்து விட்டதால் கிராமப் பொதுமக்கள் சார்பில் பனை மரத்தைக் கொண்டு தற்கா லிகமாக வாய்க்கால் குறுக்கே அமைக்கப்பட் டுள்ள நடைபாலத்தின் வழியே தான் இறந்தவர்க ளின் சடலத்தை மிகுந்த சிர மத்துடன் சுமந்து செல்கின்ற னர். இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் விவசாய நிலங் களுக்கும், இந்த பாலத்தைக் கடந்து தான் தினந்தோறும் சென்று வர வேண்டும். இத னால் விவசாய நிலங்களுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்து மற்றும் விவசாய கருவிகளை இப்பாலத்தின் வழியே எடுத்துச் செல்லவும் சிரமம் அடைகின்றனர். எனவே வட கால் கிராம மக்களின் பல வருட கோரிக்கையாக இருந்து வரும் பொறைவாய்க்கால் குறுக்கே நிரந்தரமான பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.