நாகப்பட்டினம்: தமிழ்நாடு அரசு உணவுப் பாதுகாப்புத்துறை, நாகை மாவட்டம் சார்பில், நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு உணவு வணிகர்கள், உரிமம் கோரி விண்ணப்பித்த சிலருக்கு நாகப்பட்டினம் வர்த்தகத் தொழிற் குழுமத் தலைவர் சிவசக்தி ஆர்.கே.ரவி மற்றும் நாகப்பட்டினம் ஹோட்டல் தேநீர் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் இரா.முருகையன் ஆகியோர் சான்றுகளை வழங்கினர். நிகழ்வுகளில் வர்த்தத் தொழிற் குழுமச் செயலாளர் பெ.சுந்தரவேல், உணவு விடுதி, தேநீர் மற்றும் பேக்கரி உரிமையாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பால்பாண்டியன் ஆகியோர் உரிமச் சான்றுகளை வழங்கினர். நாகப்பட்டினம் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் நன்றி கூறினார்.