tamilnadu

img

மீண்டும் அலட்சியம் வேண்டாம் இடியும் நிலையில் பொறையாறு போக்குவரத்து பணிமனை கட்டடம்

தரங்கம்பாடி, பிப்.13- நாகை மாவட்டம், பொறையாரி லுள்ள அரசு பேருந்து போக்கு வரத்து பணிமனையில் எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறைக்கட்டிடம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பயன்படுத்தக் கூடிய இந்த கழிப்பறைகள் மிக மோசமாக சுகாதார சீர்கேடு அடைந்து இருப்ப தோடு மேற்கூரைகள், சுவர்கள் சேத மடைந்து காரைகள் பெயர்ந்து பாழ டைந்து இருப்பதாக தொழிலா ளர்கள் கூறுகின்றனர். உடனடி யாக மாவட்ட நிர்வாகம் அலட்சி யம் காட்டாமல் புதிதாக கழிப்பறை களை கட்ட வேண்டுமென கூறி யுள்ளனர். இதே பணிமனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உரிய பராம ரிப்பின்றி இருந்த ஓய்வறை கட்டிடத்தின் மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் ஓய்வெடுத்த 8 போக்குவரத்து தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுகுறித்து விரைவில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். 

;