நாகப்பட்டினம், செப்.5- நாகை மாவட்டம், மயிலாடு துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகிய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. மத்திய அரசின் தொழிலா ளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் விரோத போக்கை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் சீனி.மணி, விதொச மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், விவசாய சங்க மாவட்ட பொரு ளாளர் இராசையன், விவசாய சங்க மயிலாடுதுறை வட்ட செயலாளர் ராயர், சிஐடியு மாவட்ட பொருளா ளர் ஆர்.ரவீந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் மாரியப்பன், சிறு விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைக்கண்ணு ஆகி யோர் கண்டன உரையாற்றினர். தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங் களை கார்ப்பரேட் முதலாளி களுக்கு ஆதரவாக மாற்றாதே என முழக்கமிட்டு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா, விவசாயிகள் சங்கமாவட்டத் தலை வர் ஏ.ராமையன், விவசாயத் தொழி லாளர் சங்கமாவட்டத் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்கமாநிலச் செய லாளர் எம்.சின்னத்துரை கண்டன உரையாற்றினார். கேரிக்கைகளை விளக்கி சிஐடியுமாவட்டச் செய லாளர் ஏ.ஸ்ரீதர்,விவசாயிகள் சங்க மாநிலதுணைச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமிமற்றும் நிர்வாகிகள் எஸ்.பாலசுப்பிரமணியன், கே.சண் முகம், எம்.ஜியாவுதீன்,சி.மாரிக் கண்ணு, எஸ்.பிச்சைமுத்து, பி. வீராச்சாமி, ஆர்.சி.ரெங்கசாமி, பி. மருதப்பா,எம்.ஜோஷி உள்ளிட் டோர் பேசினர்.
அரியலூர்
அரியலூர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் பி. துரைசாமி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.மகாராஜன், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.சிற்றம்பலம், விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் எஸ்என்.துரைராஜ், எல்ஐசி கே.கிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அருண் பாண்டியன், அருணன், ஆதிலட்சுமி, பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கூறுகையில், இம்மாத இறுதிக்குள் மணல் மாட்டு வண்டி மணல் குவாரி அமைத்து தரா விட்டால் மாடுகளுடன் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனை வரும், அரியலூர் ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் தலைமை அஞ் சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலை மை வகித்தார். அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங் கம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் எம்.என்,.அம்பி காபதி, நாகை ஒன்றியச் செயலா ளர் என்.வடிவேல், வி.ராதா, கே. மாரிமுத்து, விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் கே. சித்தார்த்தன், நாகை ஒன்றியச் செய லாளர் எஸ்.என்.ஜீவாராமன், பாலக் குறிச்சி எம்.முருகையன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சு. சிவகுமார், எம்.பெரியசாமி, பி.முனி யாண்டி, எஸ்.விஜயகுமார், கே. பக்கிரிசாமி உரையாற்றினர். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநி லத் தலைவர் வி.சுப்பிரமணியன் றைவுரையாற்றினார்.
கரூர்
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு சங்க மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட செயலா ளர் பி.இலக்குவன், விதொச மாவட்டச் செயலாளர் இரா.முத்து செல்வன், சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.ராஜு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் எஸ்.பிரபாகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் சக்தி வேல் கண்ணதாசன், அரவிந்த், சங் கரநாராயணன், ஜெகநாதன், ராஜா முகமது, பாலசுப்பிரமணியர், ஹோசிமின், ராஜாங்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகி யவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செய லாளர்கள் வி.எஸ்.கலியபெரு மாள், ஆர்.குமாரராஜா, டி.முரு கையன் ஆகியோர் தலைமை யேற்றனர். சங்கங்களின் நிர்வாகி கள் எஸ்.தம்புசாமி, எஸ்.சாமி நாதன், எம்.கலைமணி, இரா.மாலதி, என்.பாலய்யா, எம்.பி.கே.பாண்டியன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவாக சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.பழனிவேல், எம்.சேகர், பி.கந்தசாமி, ஒன்றிய செயலா ளர்கள் எச்.ராஜமாணிக்கம் (நீடா மங்கலம்), என்.இடும்பையன் (திரு வாரூர்) எம்.திருஞானம் (மன்னார் குடி) ஆகியோர் கலந்து கொண்ட னர்.