தரங்கம்பாடி, மே 23- நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளும் உள்ள டங்கிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அம்பன் புயல் காரணமாக எழுந்த கடல் சீற்றத்தால் கரையில் அமைக்கப் பட்ட கருங்கல் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி கடலில் அடித்து செல்லப்பட்டு சேதம டைந்தது. இதனால் படகு நிறுத்தும் தளத்தில் தண்ணீர் புகுந்து படகுகள் சேதமடையும் நிலை ஏற்பட்டது. இப்பகுதியை எம்.எல்.ஏ. பவுன்ராஜ் ஆய்வு செய்து, பாதிப்பு பகுதியை சரி செய்து தரக் கோரி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். மேலும் பாதிக்கப்பட்ட இடத்தை மீன்வளத் துறை இயக்குநர் சமீரன் பார்வையிட்டு தடுப்புச் சுவரை உடனடியாக சரி செய்து தர அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். அப்போது மீனவர்கள் சார்பில், அலை தடுப்பு சுவரின் அகலத்தையும், உயரத்தை யும் அதிகப்படுத்த வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் மற்றும் அதிவேக குதிரைத்திறன் கொண்ட விசைப்படகுகளை பயன்படுத்து பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.