சீர்காழி, ஜூன் 1- நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து சரஸ்வதி விளாகம் செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையின் இரண்டு புறங்களிலும் 3 கிமீ தூரத்துக்கு சாலையை மறைத்துக் கொண்டு போக்குவரத்து க்கு இடையூறாக சீமைக்கருவேல முட்செடிகள் நீண்டு வளர்ந்தன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஆற்றங்கரை சாலையில் போக்குவரத்து இடையூறாக இருந்த கருவேல முட்செடிகளை கோல சமுத்திரம் ஊராட்சி தலைவர் வசந்தி ராஜேந்திரன் மற்றும் ராஜேந்திரன், கதிரவன், லெட்சுமணன், சரவணன் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.