tamilnadu

img

சங்கரன்பந்தலில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஆக.8- நாகப்பட்டினம் மாவட்டம் தரங் கம்பாடி வட்டம் சங்கரன்பந்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டக்குழு உறுப்பி னர் ராசையன் தலைமையில் நடை பெற்றது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் வட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் சிம்சன், ரவிச்சந்திரன் கண்டன உரை யாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, காபிரியேல், பஷீர் அக மது, மார்க்ஸ், கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், மகாலிங்கம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.