tamilnadu

img

சிபிஎம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பேரவை

நாகப்பட்டினம், பிப்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநிலக்குழு சார்பில், தமிழக உள் ளாட்சிப் பிரதிநிதிகள் பேரவை, நாகப்பட்டினம், யாழிசை மண்ட பத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடை பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பயிற்சி முகாமாக இது அமைந்தது. பேரவைக்கு சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளருமாகிய பெ.சண்முகம் தலைமை வகித்தார். காந்தி கிராமப் பல்கலைக் கழக முன்னாள் பேராசி ரியர் க.பழனித்துரை துவக்க உரை யாற்றினார். மாநிலக்குழு உறுப்பின ரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான வி.மாரிமுத்து, மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பி னருமான நாகைமாலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தமிழகம் முழுவதிலி ருந்து வருகை தந்த சி.பி.எம். உள் ளாட்சிப் பிரதிநிதிகள், தங்கள் அனு பவங்களைப் பகிர்ந்து கொண்டும், கட்சி தங்களுக்குத் தொடர்ந்து வழி காட்ட வேண்டும் என்றும் பேசினர். சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றி னார். இந்தப் பேரவையில், ஜி.ராம கிருஷ்ணன், பெ.சண்முகம், க.பழ னித்துரை ஆகியோர் பேசும்போது, வெற்றி பெற்றுள்ள சி.பி.எம். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை அறிந்து, மக்களுக்காகப் பாடுபட வேண்டும். அந்தந்தப் பகுதி களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தன்னலம் கருதா மல் தொண்டு செய்து, இயக்கத்திற் கும் நல்லபெயர் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.