tamilnadu

img

வேதாரண்யம் ஒன்றியத்தில் சிபிஎம் போட்டி

நாகப்பட்டினம், டிச.18- நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் ஒன்றியத்தில் ஒன்றிய வார்டு உறுப் பினர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 4 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேதாரண்யம் ஒன்றி யம் வார்டு உறுப்பினர் பதவிக்கு, வார்டு உறுப்பினர் 22 - ஏ.வெற்றிச்செல்வி, வார்டு 23 - ஏ.வெற்றியழகன் ஆகிய இருவர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு- பிராந்தியக்கரை –கே.ராஜலட்சுமி, தாணிக்கோட்டகம் –வி.இளையபெருமாள், பஞ்சநதிக்குளம் கிழக்கு –எம்.செந்தில் குமார், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி- ஏ.அம ராவதி ஆகிய 4 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.