தரங்கம்பாடி, டிச.17- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத் துக்குட்பட்ட 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறது. திருவிளையாட்டம் ஊராட்சி தலை வர் பதவிக்கு கட்சியின் வட்டக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவருமான ஜி.வெண்ணிலா போட்டியிடுகிறார். அண்மையில் மாதர் சங்கம் நடத்திய சிறப்புமிக்க நடை பயணத்தில் பங்கேற்றவர். கடந்த 2 முறை திருவிளையாட்டம் ஊராட்சியின் தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பி.சீனிவாசன் பதவி வகித்துள்ளதும், தீண்டாமை இல்லா ஊராட்சி என தமிழக அரசால் பாராட்டைப் பெற்று பரிசும் பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது. கொத்தங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கு கட்சியின் கிளை செயலாள ரும், விவசாய சங்க வட்டத் தலைவரு மான என்.சந்திரமோகன் போட்டியிடு கிறார். டி.மணல்மேடு தலைவர் பதவி க்கு கட்சி உறுப்பினர் சுதா போட்டியிடு கிறார். இவரது கணவரான ரவிச்சந்தி ரன் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பின ராக உள்ளார். ஒரு முறை தவிர தொ டர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரே இங்கு பதவி வகித்துள்ளனர். திருக்கடையூர் தலைவர் பதவிக்கு கல்விக்கரசி போட்டியிடுகிறார். இவரது கணவர் பரமசிவம் கட்சி கிளை செய லாளராக உள்ளார். எடுத்துக்கட்டி தலைவர் பதவிக்கு கட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி போட்டியிடுகிறார். இலுப்பூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு கட்சி உறுப்பினர் எஸ்.ஆசிக் ரஹ்மான் போட்டியிடுகிறார். ஏற்கனவே இந்த ஊராட்சியில் 3 முறை மார்க்சிஸ்ட் கட்சி தலைவரே பதவி வகித்துள்ளார். மாணிக்கபங்கு ஊராட்சிக்கு ஜி.முரளி, நரசிங்கநத்தம் ஊராட்சிக்கு கிளை செயலாளர் குமரன் என்பவரும் போட்டியிடுகின்றனர். செம்பனார்கோ வில் ஊராட்சி ஒன்றியத்தில் 62 வார்டு களில் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.
கறம்பக்குடி பகுதி
புதுக்கோட்டை மாவட்டம் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக, மாவட்ட கவுன்சில் வார்டு எண் 5, கறம்பக் குடி பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வசந்தகுமாரி பொன்னுச்சாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.