tamilnadu

img

46 ஆவது முறையாக இரத்த தானம் செய்த தோழர்...

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 46 ஆவது முறையாக இரத்த தானம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஏ.ஆர். விஜய் என்ற தோழர். 

மயிலாடுதுறையில் வசிக்கும் ஏ ஆர்.விஜய், 1999ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, வட்டத் தலைவராகவும், இரத்த தான கழகத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டக் குழுவில் உள்ள இவர், பலரின் அறுவை சிகிச்சைக்காகவும், பிரசவம் உள்ளிட்ட அவசர உதவிக்காகவும் 45 முறை உதிரத்தை தானமாக அளித்துள்ளார்.  3 மாதத்திற்கு ஒரு முறை, 2 மாதத்திற்கு ஒரு முறை என இரத்த தானம் செய்து வருவதை அறிந்த மருத்துவர்கள் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, அடிக்கடி இரத்தம் வழங்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியும், பிறரின் உயிர் காக்க தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தானம் செய்து வருகிறார்.  

இந்நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் இரத்தம் இருப்பு குறைக இருப்பதை அறிந்து வாலிபர் சங்கத்தினரிடம் மருத்துவமனையிலிருந்து அணுகியதை யடுத்து, ஏ.ஆர்.விஜய் உள்ளிட்ட தோழர்கள் 3 யூனிட் இரத்தத்தை புதனன்று  தானமாக வழங்கினர். 45 வயதாகும் தோழர் ஏ.ஆர்.விஜய் 46 முறையாக இரத்த தானம் அளித்துள்ளார்.மக்களின் உயிர் காக்க உடல் நலத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, உதிரம் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ள தோழர் .ஏ ஆர் விஜயின் மனிதாபிமானம் இரத்ததானம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மயிலாடுதுறை பகுதியில் அதிகமுறை இரத்த தானம் செய்தது ஏ.ஆர்.விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

;