tamilnadu

தோழர் ஆர்.முத்துசுந்தரம்  நினைவுதினம்: நூல் வெளியீடு

நாகப்பட்டினம், ஆக.9- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், நாகப்பட்டினம் மையம்  சார்பில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன முன்னாள் தேசியத் தலைவர் தோழர் ஆர்.முத்துசுந்தரம் 3-ஆம்  ஆண்டு நினைவு தினக் கருத்தரங்கம், நாகை அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை  நடைபெற்றது. இதில்  அ.தி.அன்பழகன் எழுதிய ‘தோழர் ஆர்.எம்.எஸ்.பற்றிய நினைவு நூல்’ வெளியிடப்பட்டது. கருத்தரங்கிற்கு சங்க மாவ ட்டத் தலைவர் து.இளவரசன் தலைமை வகித்தார்.  “இலட்சியத் தலைவன், இலட்சத்தில் ஒருவன்” என்னும்  தலைப்பில் தோழர் ஆர்.எம்.எஸ்.பற்றி, அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் எழுதிய நூல் பற்றி,  நூலாசிரியர் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு நூலை வெளியிடத்  தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்க மாநிலப் பொருளா ளர் நா.வினோத்குமார் நூலைப் பெற்றுக் கொண்டார்.

;