தரங்கம்பாடி, அக்.1- “தொழில் தொடங்கி ஓரளவு முன்னுக்கு வந்து விட்டாலே போதும் தான் வாழ்ந்த கிராமத்தை மறந்து, உறவுகளை மறந்து தன்னை பெரிதாக நினைத்துக்கொண்டு வாழும் ஒரு சில தொழிலதிபர்களுக்கு மத்தியில் சொந்த கிராமத்தை தத்தெடுத் துக்கொண்டு ஏழைகளுக்கு உதவு வதிலேயே தனது உழைப்பின் வரு மானத்தில் பெரும்பகுதியை செலவு செய்து விட்டு ஏழைகளுக்கும், மதங் களை, சாதிகளை உடைத்து அனை வருக்கும் உதவுவதையே கடமையாக கொண்டிருக்கும் ஆச்சரியமான சமூக சேவகராக விளங்குகிறார் அய்யப் பன்” நாகை மாவட்டம் ,தரங்கம்பாடி வட்டம், நல்லாடை முக்கூட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவுக்குள் ளாகவே அமைந்துள்ள சின்னஞ்சிறு ஊர் பனங்குடி. இக்கிராமத்தில் சிங்கராசு- சாவித்திரி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தான் அய்யப்பன், சிறுவயது முதலே பிறருக்கு உதவுவதை வழக்க மாகக்கொண்டிருந்தவர் இன்னும் உதவிக்கொண்டே இருக்கிறாரே தவிர ஓய்ந்துவிடவில்லை. கல்லூரி படிப்பை முடித்து விட்டு சென்னை சென்று தொழில் தொடங்கியவர் இன்று ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளார்.தனது நிறுவனத்தில் திறமைக்கு தான் ஊதி யம் அதிகமே தவிர சாதி,மதம் பார்த்து இல்லை என சிரித்துக்கொண்டே கூறு கிறார். கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளுக்கு கிராம மக்கள் அழைத்ததால் சொந்த ஊருக்கு வந்த வர் கேக் வெட்டி, விருந்து உண்டு கொண்டாடி விட்டு சென்னைக்கு செல் வதற்கு பதிலாக தலித் தம்பதியினர் ஒருவருக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துவிட்டு ஆயி ரக்கணக்கான ஏழைகளுக்கு உண வளித்து சுற்றியுள்ள கிராம,கிராமமாக சென்று 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பள்ளிவாசல் சீரமைக்க நிதியளித்த அய்யப்பன் மனிதன் தான் மதத்தை உருவாக்கினான், மதம் மனிதனை உருவாக்கவில்லை என்பதற்கு சான் றாக மதங்களை கடந்தவன் நான் என நீலவெளி என்னும் கிராமத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல் ஒன்றை சீர மைக்க சில லட்சங்களை வழங்கினார் அய்யப்பன். அத்தோடு நின்று விடா மல் இப்பகுதியில் சேதமடைந்து காணப்படும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங் களை வழங்கிவிட்டு பள்ளிகளை சீர மைத்து தர பெரும் திட்டத்தையும் வகுத்துவருகிறார் தொழிலதிபர் அய்யப்பன். தரங்கம்பாடி வட்டம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை துவங்கியுள்ளார். தரங்கம்பாடி வட்டம் முழுவதிலும் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை துவங்கி விட்டதாகவும், அய்யப்பன் சிங்கராசு சேவை இயக் கம் என்ற பெயரில் அந்த பணியை ஏராளமான இளைஞர்களின் ஒத்து ழைப்போடு ஒவ்வொரு பகுதியிலும் செய்து வருவதாகவும், 1 லட்சம் என்பது முடிவல்ல இன்னும் பல லட்ச மரங் களை தொடர்ந்து நட்டுக்கொண்டே இருப்பதே என் வேலை என்று கூறிய அய்யப்பன் ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 5 மரமாவது நட்டால் தான் பூமி வெப்பமயமாவதை குறைக்க லாம் என்றார். அய்யப்பன் சென்னையில் இருந் தாலும் இப்பகுதியில் அவர் தொடங்கி வைக்கும் ஒவ்வொரு பணியையும் கச்சிதமாய் செய்து வரும் அவரது நண் பர் ஜெயகாந்தன் கூறும்போது, ஏழை களுக்காக கல்வி, மருத்துவம், அடிப் படை வசதி என இதுவரை ஏராளமான மக்களுக்கு விளம்பரமே இல்லாமல் செய்து வருகிறார்.சிறு வயது முதல் அவருடன் பழகி வருகிறேன் பிறரின் முகம் சுளிக்காமல் நடந்து கொள்பவர், உதவி என்று வருபவரே வெறுமனே அனுப்பியதே கிடையாது.வட்டம் முழு வதும் மரங்களை நட்டு வைக்கும் பணி யை தொடங்கி விட்டோம், எங்கள் பணி இன்னும்,இன்னும் விரிவடையுமே தவிர சுருங்கி விடாது என உற்சாகமாக கூறுகிறார். தனக்காக மட்டும் வாழாமல் பிற ருக்கு உதவிடுவதையே வாழ்க்கை யாக கருதும் அய்யப்பன் சிங்கராசு போன்ற சமூக சேவகர்களின் பணி ஏழைகளுக்கு மட்டுமல்ல யாருக்கும் உதவாத பணக்காரர்களுக்கும் நல் காற்றாக உதவும் அவர் வளர்க்கும் மரங்கள் மூலம். செ.ஜான்சன், தரங்கம்பாடி