tamilnadu

img

குடியுரிமை மசோதாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

சீர்காழி, பிப்.3- குடியுரிமைச் சட்ட மசோதாவை எதிர்த்து நாகை மாவட்டம் கொள்ளி டம் பேருந்து நிறுத்தம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லசேது ரவிக்குமார் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், துணைத்தலைவர் பானுசேகர் முன்னிலை வகித்தனர். சீர்காழி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் முதல் கையெ ழுத்துட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் பி.விஜய், வி.ச. வட்ட துணைத்தலைவர் சி. பாக்யராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் படேல், மேற்கு வட்டாரத் தலைவர் ஞானசம்மந்தம், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் செந்தாமரைக் கண்ணன், பரகத் நிஷா, நகர செயலாளர் அமிர்தரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கையெ ழுத்து இயக்கம் திமுக அறந்தாங்கி நகர செயலாளர் இரா ஆனந்த் தலை மையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சமாஜ்வாதி கட்சி மாவட்டத் தலைவர் சரவணமுத்து, மனிதநேய ஜனநாயக கட்சி முனைவர் முபாரக் அலி, காங்கிரஸ் நகர தலைவர் வீராசாமி, திமுக பேச்சாளர் வழக்கறிஞர் வெங்கடேசன். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முத்து, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கிரீன் முகம்மது, சிபிஎம் நகர செயலாளர் தங்கராஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.