நாகப்பட்டினம், மார்ச் 4- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் நாகை மாவட்ட 3-வது மாநாடு, சிக்கலில் நடைபெற்றது. குடியுரிமைத் திரு த்தச் சட்டம் உள்ளிட்ட சட்ட ங்களைத் திரும்பபெற வேண்டும்; தலித் கிறிஸ்த வர்களுக்கு இட ஒது க்கீடு வழங்க வேண்டும்; சிறுபான்மை மாணவர்க ளுக்குக் கல்வி உதவித் தொகை மற்றும் கல்விக்கடன் வழங்குதல், சிறுபான்மை மக்களுக்கெனத் தனித்து றை, தனி அமைச்சகம் ஏற்படு த்துதல் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். மாவ ட்டப் பொருளாளர் டபிள்யு.காபிரியேல் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் வேலை அறி க்கையை முன்வைத்து உரை யாற்றினார். அமைப்பின் மாநிலச் செயலாளர் ‘மேடைக் கலைவாணர்’ என்.நன்மாறன், மாநாட்டைத் துவக்கி வைத்துச் சீருரை யாற்றினார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாகை மாலி சிறப்புரையாற்றினார். அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.மாரிமுத்து நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.கே.குமார் நன்றி கூறினார்.