தரங்கம்பாடி ஆக 10- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் கல்லூரியில் தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி கலைமகள் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு தலைமையில் சனியன்று நடைபெற்றது. அரசு பொதுத்தேர்வு எழுத தயாராக உள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் அச்சமின்றி எழுத எப்படி தங்களை தயார்படுத்திக்கொள்வது, ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்துவது என்றும் மாணவர்கள், ஆசிரியர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு தேர்வுகள் துறையின் ஓய்வுப் பெற்ற இயக்குநர் கே.தேவராஜன் உரையாற்றினார். மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வெங்கடாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், மயிலாடுதுறை பகுதி பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.