tamilnadu

வேதாரணியம் ரூ.33 லட்சம் மதிப்பு கஞ்சா மூடை சிக்கியது

 நாகப்பட்டினம், பிப்.13- நாகை மாவட்டம், வேதா ரணியம்-கோடியக்கரை வழியாக, இலங்கைக்குக் கடத்தவிருந்த ரூ.33 லட்சம் மதிப்புடைய கஞ்சா மூட்டை களைக் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி மற்றும் இரு கார்கள் வியாழன் அன்று பிடிபட்டன. வியாழக்கிழமை காலை வேதாரணியம் வட்டம் ஆயக்காரன்புலம் சாலை யில் ஒரு கன்டைனர் லாரி யும் முன்னும் பின்னும் இரு கார்களும் சென்றன. காவல் துறையினர் தடுத்து நிறுத்திச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் இருந்த கஞ்சா மூட்டைகள் பிடி பட்டன. 330 பண்டல்களில் 620 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றின் மதிப்பு ரூபாய் முப்பத்து மூன்று லட்சம் இருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இவை, கோடியக் கரை வழியாக இலங்கை க்குக் கடல் வழியாகக் கடத்த விருந்தது. கண்டைனர் லாரி ஓட்டுநர் ரமணன்(சென்னை), கிளீனர் தவமணி, வேதாரணி யம் செல்வராஜ், கோடி யக்காடு ஐயப்பன், கோடி யக்கரை பரமானந்தம் ஆகி யோர் கைது செய்யப்பட்ட னர். கண்டெய்னர் லாரியும் இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.