tamilnadu

img

கல்வி உரிமை மாநாட்டுப் பிரச்சாரம் 

 நாகப்பட்டினம், ஆக.20- வரும் 23-ல் திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறவிருக்கும் கல்வி உரிமைப் பாதுகாப்பு மாநாட்டிற்காக, நாகை மாவட்டத்தில் த.மு.எக.ச. சார்பில் பிரச்சாரக் கலைப் பயணம் நடை பெற்றது. செம்பனார்கோயில் மேலமுக்கூட்டில் தமுஎகச மாவட்டப் பொருளாளர் நா.ராஜாராமன் தலைமையில் பிரச்சா ரக் கலைப் பயணத்தைக் கனரா வங்கி ஊழியர் சங்கத் தலை வர் ஆறாமதி துவக்கி வைத்தார். கலைக்குழுவில் பாடகர்கள் ‘நன்னானே’ சு.ரமேஷ், கவி ஞர் கதிரை நீலமேகம், செம்பை குணா, தவில் கலைஞர் ஜி.வீரராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரா.தேன்மொழி, கலா, சதீஷ்ராஜ், பரணீதரன், இரா.கமலநாதன், எம்.ராமச்சந்தி ரன், ஆக்கூர் சிவராமன், பொன்.தேவேந்திரன், ஸ்ரீதர் உள்ளிட் டோர் பங்கேற்றனர். கலைப் பயணக்குழு, மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட பகுதியில் பயணித்து, இரவு 10 மணிக்கு ஆக்கூரில் நிறைவு பெற்றது. தமுஎகச மாவட்டச் செயலா ளர் ப.பாலசுந்தரம் நிறைவுரையாற்றினார்.

;