தரங்கம்பாடி, மார்ச் 10- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், நல்லாடை கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாண விகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதி யான தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரை உடனடியாக கைது செய்யவில்லையெனில் போராட் டங்களை நடத்துவோம் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. நல்லாடை மெயின் ரோட்டிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நல் லாடை, காருகுடி, விளாகம், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர குடும் பங்களின் மாணவ, மாணவிகள் ஏரா ளமானோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றி வருகின்ற திருவிளையாட்டத்தை சேர்ந்த நாரா யணபிரசாத் என்கிற ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இரட்டை அர்த்தத்தில் மாணவிகளி டம் பேசுவதாகவும் பலமுறை புகார் கள் வந்த நிலையில் மாணவிகள் சிலரை தலைமையாசிரியருக்கே தெரியாமல் கல்வி களப்பணி சுற்றுலா என மாணவர்களிடம் பொய்யாக கூறி கடந்த டிசம்பர் மாதம் தஞ்சாவூர், திருச்சி, கல்லணை என அழைத்துச் சென்ற நாராயணபிரசாத் மாணவிக ளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாகவும் தெரிய வருகிறது. தான் இப்படி நடந்து கொள்வதை யாரிடமும் சொல்லக் கூடாதெனவும், அப்படி சொல்லிவிட்டால் செய் முறை பயிற்சி மதிப்பெண் போட மாட்டேன் என மிரட்டி சத்தியம் வாங்கிக் கொண்டதாகவும் பாதிக் கப்பட்ட மாணவிகள் கூறியிருக்கின்ற னர். தற்போது செய்முறை பயிற்சி மார்க் போட்ட நிலையிலேயே ஒவ்வொரு மாணவிகளாக நாராயண பிரசாத்தின் தவறுகளை வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளதாக அப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கள் கூறுகின்றனர். மேலும் மாணவர்களை தனது வீட்டு வேலைகளை செய்து தரவும் பல முறை அழைத்துச் சென்ற தோடு, ஆசிரியராக இருந்து கொண்டு பல தவறான வேலைகளை அச்ச மின்றி செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாராயண பிரசாத்தின் தவறான நடவடிக்கைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோ ரிடம் பலரும் புகார் அளித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நாராயணபிரசாத்தை அரசு பொதுத்தேர்வு பணிக்கு அனுப்பியுள்ளனர். தவறை செய்தவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ள இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறும் போது, இச்சம்பவம் குறித்து முறை யான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்காமல் குற்றம் செய்த நாராயண பிரசாத்திற்கு ஆதரவாக செயல்படு கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. தவறு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவரை தேர்வு பணி செய்ய அனுப்பி யிருப்பது கடும் கண்டனத்திற்குரி யது. உடனடியாக அவர் மீது உரிய வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வில்லையெனில் போராட்டங்களை இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து நடத்துவோம் என கே.பி.மார்க்ஸ் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்லாடை அம்பேத்கர் நகரிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவிகளிடம் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பரமேஸ்வரன் என்பவர் தவறுதலாக நடப்பதாக புகார் எழுந்து பல்வேறு போராட்டங் கள் அது சம்பந்தமாக நடந்த நிலை யில் அதேப் பகுதியிலுள்ள மற்றொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவரால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருக்கும் தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.