tamilnadu

img

பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் தர்ணா

நாகப்பட்டினம், மே 9- பி.எஸ்.என்.எல். பொது நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கடந்த 12 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. ஊரடங்குக் காலத்தில் ‘அவுட் சோர்சிங்’ முறையில் ஊழியர்களை நிய மிக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகப்பட்டினம் பி.எஸ்.என்.எல்.அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், நாகைக் கிளை சார்பில் தர்ணா  நடைபெற்றது.  தர்ணாவிற்கு கிளைத் தலைவர் பி.மணிகண்டன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பி.பிரகாஷ், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம். குருசாமி, கே.சிவக்குமார், இ.சுந்தரேசன், டி.மதியழகன், எஸ்.எம்.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;