tamilnadu

கொரோனாவைக் காரணம் காட்டி ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்காதே! அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்/கரூர், ஜூலை 16- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி,  வருவாய்த்துறை கிராம உதவியாளர் உள்ளி ட்ட அனைவருக்கும் ஊதியக் குழுவில் வரை யறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெறும் வயதை 59 ஆக உயர்த்தியதைக் கைவிட வேண்டும், கொ ரோனாவைக் காரணம் காட்டி சரண்டர் ரத்து,  அகவிலைப்படி முடக்கம், வருங்கால வைப்பு  நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட ஊழியர் விரோத  நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என  வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட மையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர். 
கரூர்
கரூர் மாவட்டக் குழு சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.சுப்ரமணியன் தலைமை வகி த்தார். மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாவட்டத் தலைவர் சா.கோதண்ட பாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ஆ.ரெங்கசாமி விளக்கவுரையாற்றினார். நிறைவாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளரிடம் முறையீடு செய்து கடிதம் கொடு க்கப்பட்டது.