tamilnadu

img

பாலியல் குற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

சீர்காழி: நாகை மாவட்டம் கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆணைக்காரன் ஊராட்சி மற்றும் நேருயுவகேந்திரா சார்பில் பாலியல் குற்றத்திற்கு எதிராகவும், குழந்தைகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பாரத் தலைமை வகித்தார்.  பள்ளி தலைமையாசிரியர் பழனிவேல் வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் மதனகோபால் பேரணியைத் துவக்கி வைத்தார். ஊராட்சி செயலாளர் செந்தில் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 

;