தரங்கம்பாடி ஜூன் 19- சங்கக்கால நகரங்களில் ஒன்றான பூம்பு காரைப் போன்றே வரலாற்று தொன்மை யான நகரங்களில் ஒன்று நாங்கூர். காவிரி பூம்பட்டினம் என்று அழைக்கப்படும் பூம்பு காரின் தலைமையிடமாக விளங்கிய நாங்கூரில் கடந்த சில நாட்களாக இரு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய் வில் 2300 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் பயன்படுத்திய கருப்பு, சிவப்பு நிறத்தி லான பானைகள், மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள், கூரை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் முத்திரை பதிவு கள், சுடுமண் தாயம், கண்ணாடி மணிகள் மற்றும் மீன் எலும்புகள், கீறல் குறியீடுகள், வளையல்கள், மணிகள் என 100 க்கும் மேற்பட்ட பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இப்பொருட்களை கொண்டு பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள உதவும் என்கின்றனர். ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் காவிரி படுகையில் உள்ள ஊர்களின் உரு வாக்கம், நாடுகளின் தோற்றம், வேளாண் மையின் தொடக்கம் குறித்த தரவுகளைக் கொண்டு விரிவான அகழாய்வுக்கு இந்த ஆய்வு கொண்டு செல்லும் என்றும், அதன் மூலம் நாங்கூரின் சிறப்பினை ஆழமாக அறியலாம் என கடந்த ஒரு மாத காலமாக அகழாய்வு பணியினை தலைமை தாங்கி செய்து வருகின்ற தஞ்சாவூர் தமிழ் பல்கலை க்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல்துறை இணை பேராசிரி யர் செல்வக்குமார் கூறுகிறார். இந்த அகழாய்வு பொருட்களின் கண்காட்சி நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதனன்று அகழாய்வில் கிடைத்த சுமார் நூற்றுக்கணக்கான பொருட்களை காட்சிப்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கங்களையும் ஆய்வு குழு வினர் வழங்கினர். கி.மு 3 ஆம் நூற்றாண்டு பொருட்களை பார்த்த அனைவரும் பிரம்மிப்புடன் பார்த்து கேட்டறிந்தனர். பூம்புகார் அருகேயுள்ள நாங்கூரில் கிடைத்துள்ள கி.மு 3 ஆம் நூற்றாண்டு பொருட்கள் காவிரி படுகையில் ஏராள மான வரலாறுகள் புதைந்துள்ளன என நமக்கு உணர்த்துவதாக உள்ளது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க நாகை மாவட்ட செய லாளர் பாலசுந்தரம் கூறுவதோடு உடனடி யாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து நாங்கூரில் முழுமையாக அகழாய்வு மேற் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். (ந.நி)