tamilnadu

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய கமிஷன் தொகை வசூல்

சீர்காழி, பிப்.6- கொள்ளிடம்  பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் விவசாயிகளிட மிருந்து கமிஷன் தொகை பெறு வதை தடுத்த நிறுத்த கோரிக் கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் மாதிர வேளூர், அகரஎலத்தூர், குன்னம் உள்ளிட்ட 42 ஊராட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள் முதல் உள்ளன. விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு சாகுபடி செய்து கொள்முதல் நிலை யங்களுக்கு நெல்லை விற் பனை செய்ய வரும் போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூ 1 வீதம் கமிஷன் தொகை கொடுக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. சராசரி யாக 40 கிலோ மூட்டைக்கு ரூ 40 கமிஷன் தொகை கொ டுத்தேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் விவ சாயிகள் கமிஷன் தொகை கொடுத்து விட்டுத் தான் வரு கின்றனர். நெல் மூட்டை ஒன்று ரூ.780 வீதம் விற்பனை செய்யும் போது ரூ. 40 வீதம் முன்னதாகவே கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர்.  ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ.40 வீதம் விவசாயிகள் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. இது குறித்து கொள்ளிடம் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு செய லாளர் விசுவநாதன் கூறுகை யில், விவசாயிகள் கடன் வாங்கி கஷ்டப்பட்டு கொள் முதல் நிலையத்துக்கு விற் பனைக்கு எடுத்துச் செல்லும் போது மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் முன்கூட்டியே கமிஷன் பெற்றுக் கொள் கின்றனர். இதனால் விவசாயி கள் மிகுந்த துயரம் அடை கின்றனர். எனவே விவசாயி கள் நலன் கருதி கொள்முதல் நிலையங்களில் கமிஷன் தொகை பெறுவதை உடன டியாக தடுத்து நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

;