tamilnadu

img

அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மே 24- மத்திய- மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்து, நாகை மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிக்கல் கடைத்தெருவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. ஒன்றி யத் தலைவர் கே.ஏ.குமார் தலைமை வகித்தார். கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் சிறப்புரை யாற்றினார். ஆர்.பாலு உள்ளிட்டோர் பங் கேற்றனர். கீழ்வேளூரில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக வட்டச் செயல் முறைக் கிடங்கு முன்பு கட்டுமானத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வ ராஜ் தலைமையில் அர்ப்பாட்டம் நடை பெற்றது.