திருக்கடையூர், நவ4. நாகை மாவட்டம், திருக்கடையூர் அரு கேயுள்ள பி.பி.நல்லூ ரில் அறுந்து விழுந்த மின் கம்பிகள் அதி காரிகள் துணையுடன் சீரமைக்கப்பட்டது. நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சி யில் பவர் பிளாண்ட் உள்ளது. இங்கு 230 கிலோ வாட் கொண்ட மின்சாரம் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பவர் பிளாண்ட்டில் மின்சாரம் உற்பத்தி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு கடலங்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இந்நிலையில் பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சிக்குட் பட்ட செட்டிமேடு பகுதிக்கு செல்லும் சாலை, தெற்குதெரு, நடுத்தெரு பகுதிகள் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதி வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன. இது போன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்வதா லும் வீட்டு மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்து வருவதா லும் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டனர். இதனை தொடர்ந்து கடலங்குடி துணை மின்நிலைய செயற்பொறியாளர் ரோஜாரமணி, உதவி செயற்பொறியா ளர் பாரதி, மயிலாடுதுறை உதவி ஆட்சியர் கண்மணி, தரங்கம் பாடி தாசில்தார் சித்ரா, சீர்காழி போலீஸ் துணை கண்காணிப் பாளர் (பொறுப்பு) இளஞ்செழியன், பொறையார் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அறுந்து விழுந்த உயரழுத்த மின் கம்பியை சரி செய்து, மீண்டும் மின்கம்பி அறுந்து விழாமல் இருக்க ரப்பர் மாதிரியுள்ள பாலிமர் இன்ஸ்லேட்டர் பீங்கான் மூலம் மின்கம்பி சரி செய்யப்பட்டது.