tamilnadu

img

சீர்காழி புத்தூரில் 3 நாளாக குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் 

 சீர்காழி, ஆக.5- சீர்காழி அருகே புத்தூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுவதால் நட வடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூரிலிருந்து மாதானம் சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கத்திலி ருந்து குழாய் மூலம், பழையபாளையம் கிராமத்தில் உள்ள தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பப்பட்டு அங்கு நீர் சுத்திகரிக்கப்பட்டு பின் மின் மோட்டார்களின் மூலம் பல கிராமங்களுக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.  இதில் வடரெங்கத்திலிருந்து பழையபாளையம் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் புத்தூர் டாஸ்மாக் மதுக்கடை அருகே புத்தூரி லிருந்து மாதானம் செல்லும் நெடுஞ்சாலையில் நடுவே தண்ணீர் வெளியேறி சாலையோரம் வீணாகச் சென்று தேங்குகிறது. கடந்த மூன்று நாட்களாக வீணாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் வீணாக குடிநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த நீரை சேமித்தால் கிராமங்களுக்கு போய் சேர வேண்டிய உரிய நீர் சென்று சேர்ந்து விடும். ஆனால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து 3 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்தி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.