இந்தியாவில் அந்தந்த மாநில அரசுகளுக்கு சொந்தமான 70 போக்குவரத்து நிறுவனங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு இயங்கி வருகின்றன. மத்தியில் பிஜேபி அரசு பொறுப்பேற்ற முந்தைய 5 ஆண்டுகளில் வட மாநிலங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடு கந்தலாக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து கள் இயக்கம் வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு அரசு பேருந்துகள் இயக்குவதை சீர்குலைக்க வேண்டுமென்ற நோக்கில் பிஜேபி அரசு செயல்பட்டு வருகின்றன என்றால் அது மிகையல்ல.
பிஜேபி அரசு தாக்கல் செய்த மசோதா:
கடந்த 13.09.2014 அன்று சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா 2014 என்று அரசு வெளி யிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பிஜேபி அரசு அந்த மசோதா கொண்டு வருவதற்கு சொன்ன காரணம், நாட்டில் சாலை விபத்தில் ஆண்டு தோறும் ஒன்றரை லட்சம் பேர் இறக்கிறார்கள். அதனை கட்டுப்படுத்தவே பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்கிறோம் என்று கூறியது. ஏஐஆர்டிடபிள்யுஎப், சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் நாடு முழுவதும் அதை எதிர்த்து பிரச்சா ரங்களை மேற்கொண்டதன் விளைவாக இம்மசோதா கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் அடக்கி வாசித்த மத்திய அரசு, பின்னர் இருக்கும் மோட்டார் வாகன சட்டத்திலேயே 68 திருத்தங்களையும், 28 புதிய ஷரத்துகளையும் இணைத்து “மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை” தாக்கல் செய்து நாடாளுமன்றத் தில் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. ஆயினும் மாநிலங்க ளவையில் கிடைத்த பிறகு தான் சட்ட வடிவமாக்க முடியும். மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத தால் அது நிறைவேற்றப்படவில்லை. கடந்த 13.09.2014 அன்று சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா 2014 என்று அரசு வெளி யிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பிஜேபி அரசு அந்த மசோதா கொண்டு வருவதற்கு சொன்ன காரணம், நாட்டில் சாலை விபத்தில் ஆண்டு தோறும் ஒன்றரை லட்சம் பேர் இறக்கிறார்கள். அதனை கட்டுப்படுத்தவே பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்கிறோம் என்று கூறியது. ஏஐஆர்டிடபிள்யுஎப், சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் நாடு முழுவதும் அதை எதிர்த்து பிரச்சா ரங்களை மேற்கொண்டதன் விளைவாக இம்மசோதா கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் அடக்கி வாசித்த மத்திய அரசு, பின்னர் இருக்கும் மோட்டார் வாகன சட்டத்திலேயே 68 திருத்தங்களையும், 28 புதிய ஷரத்துகளையும் இணைத்து “மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை” தாக்கல் செய்து நாடாளுமன்றத் தில் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. ஆயினும் மாநிலங்க ளவையில் கிடைத்த பிறகு தான் சட்ட வடிவமாக்க முடியும். மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத தால் அது நிறைவேற்றப்படவில்லை.
தொழிலாளர்கள் / மக்களை தாக்கும் நடவடிக்கை
முந்தைய மசோதா கிடப்பில் இருந்த காலத்தி லேயே தனது சித்து வேலையை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியம், உரிமம் புதுப்பிப்பு, எப்.சி போன்றவற்றிற்கு பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வயிற்றில் அடித்து வருகிறது. இப்போது புதிதாக “ரெட்பஸ்” என்ற புதிய பேருந்தை இறக்கி உள்ளது. இதில் நடத்துனருக்கு இருக்கையே இல்லை. அதாவது நடத்துனர் பணி என்பதையே ஒழித்துவிடு வது என்பதே இதன் நோக்கமாகும்.இதனால் நாடு முழு வதும் சுமார் 6 லட்சம் நடத்துனர்கள் பணி என்பது ஒழிக்கப்பட்டுவிடும். மேலும் கடந்த 18.06.2019 அன்று மோட்டார் வாகன சட்டத்தில் மின்சார பேருந்து இயக்குவதற்கான விதிமுறை திருத்தம் செய்து மத்திய பிஜேபி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி மின்சாரத்தால் இயக்கப்படும் பேருந்துக்கு பர்மிட்டே தேவையில்லை என விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மின்சார பேருந்து இயக்கத்தை யாராலும் தடுக்க முடியாது. எந்த வழித்தடத்திலும் அது அரசு பேருந்து வழித்தடமானாலும் தனியார் பேருந்து வழித்தடமானாலும் மின்சார பேருந்தை இயக்க முடியும். இதனை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தா லும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. அதற்கு தீர்வு காண நாம் ஒன்றுபட்டு இயக்கம் நடத்துவதும், போராடுவதும் மேலும் அவசியமாகிறது. சிஐடியு தொழிலாளர்களின் வாழ்வு பிரச்சனைக் காக மட்டுமல்ல; தேசிய நலனையும் கருத்தில் கொண்ட தாகும். நாட்டிலுள்ள பொதுப் போக்குவரத்தை குறிப்பாக அரசுப் போக்குவரத்தை பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு நமக்கு உண்டு. அரசுப் போக்குவரத்து தொடர வேண்டும். அது தான் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மலிவான போக்குவரத்து சாதனமாக இருந்து வருகிறது.
அரசுப் போக்குவரத்து
1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபின் பெர்மிட் காலம் முடிவடைந்த 495 தனியார் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. 1971-ல் வெளியான அரசாணைப்படி பல்லவன் போக்குவரத்துக் கழகம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டது. 1972-ல் டிவிஎஸ், ஏபிடி போன்ற தனியார் நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டன. போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. 2000-ஆவது ஆண்டில் 15773 பேருந்துகளும், 2018 முதல் 19490 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. 18 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் 3717 பேருந்து கள் மட்டுமே கூடுதலாக இயக்கப்பட்டிருப்பது போது மானதல்ல.
தொழிலாளர்களை தாக்கும் கழகங்கள்
புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அரசு அறி வித்த போதிலும் பழைய பேருந்துகளே பெரும்பாலும் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் வசதி யாக செல்ல முடியாத நிலை. பேருந்து எண்ணிக்கை குறைப்பு, பணியாளர்கள் பேருந்துகள் வழித்தடங்கள் இடமாற்றம் செய்தல், நாளொன்றுக்கு 600 கி.மீ தூரத்தி ற்கு இயக்க ஓட்டுனர், நடத்துனர்களை வற்புறுத்துவ தும், மாத ஊதியத்தை ஓரிரு கழகங்களில் 2 தவணை களில் வழங்குவதும், சில பிரிவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய முடியாத நிலை தொடர்வதும், நிதிப்பற்றாக்குறையால் ஊழியர்களின் சட்டப்படியான ஒப்பந்தப்படியான உரிமைகள், சலுகைகள், பென்சன் தொடர்பான கோரிக்கைகள் தீர்க் கப்படாமல் நிலுவையில் வைக்கப்படும் சூழல், தொழி லாளர்கள் ஓய்வு பெறும் போது எந்த பணப்பலனும் வழங்காமல், ரிட்டயர்மென்ட் ஆர்டரை மட்டும் கையில் கொடுத்து அனுப்பும் நிலை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
மசோதா நிறைவேற்றப்பட்டால்
இந்நிலையில் இந்த சட்டத்திருத்தம் நிறை வேற்றப்பட்டால் ஒன்றிரண்டு ஆட்டோ அல்லது டாக்சி களை வைத்துக் கொண்டு ஓட்டும் ஓட்டுனர்களின் பிழைப்பு முற்றிலுமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் போய்விடும். நடைபாதை பழுதுபார்ப்பு பட்டறைகள் காணாமல் போய்விடும். இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்களுக்கே செல்ல வேண்டிய கட்டாயமும் ஏராளமான பணம் கொட்டி அழவேண்டிய நிர்பந்தமும் ஏற்படும். சிறு அள விலான ஆட்டோ மொபைல் உதிரிபாக உற்பத்தி பிரிவு கள் மூடப்படும் அல்லது பிராண்டு தயாரிக்கும் கம் பெனிகளின் துணை அமைப்பாக மாற்றப்பட்டுவிடும். இதை நம்பி இருக்கும் சில்லரை விற்பனையாளர்க ளும், தொழிலாளர்களும் வேலை இழப்பார்கள். தற்போது நடத்தப்படும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பயிற்சி பள்ளிகள் மட்டும் இருக்கும் அரசு போக்குவரத்தில் அனைத்து பணிகளும் அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர் கொள்வார்கள். அரசு போக்குவரத்தில் அனைத்து பணி களும் அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றப்பட்டு தொழிலா ளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள் வார்கள். அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறுக சிறுக இயற்கையாகவே சாகடிக்கப்பட்டு பெரிய கார்ப்ப ரேட் அமைப்புகளே போக்குவரத்தை இயக்க வழிவகுப்ப தால் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.
பிரிட்டிஷ் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு படிப் படியாக வளர்ந்து இன்று மக்களின் பயணத்துக்கு நாடு முழுவதும் நண்பனாக இருக்கும் அரசுப் போக்கு வரத்தையும், பொதுப் போக்குவரத்தையும் எப்படியா வது ஒழித்து தனியார் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பது தான் மோடி அரசின் நோக்கம். அதற்கு அதிமுக அரசும் தாளம் போடுகிறது. அந்த நோக்கம் நிறைவேற விடக்கூடாது. ஏனெனில் நமது வாழ்வும்-தாழ்வும் அரசுப் போக்குவரத்தில் பிணைந்து கிடக்கிறது. இரண்டாவதாக இது பொது மக்களின் சொத்து, அதை தனியார் சூறையாட அனு மதிக்கக்கூடாது. எல்லாவற்றிலும் மேலாக ஏழை-எளிய நடுத்தர மக்களின் போக்குவரத்து சாதனமான பொதுப் போக்குவரத்து குறிப்பாக அரசுப் போக்குவரத்து நீடிப்பது தான் ஒரு உண்மையான மக்கள் நலத்திட்ட மாகும்.
பேரணியில் சங்கமிப்போம்
நடைபெறும் மாநாட்டில் ஸ்தாபனத்தினுடைய குறைநிறைகளை விவாதித்து சம்மேளனத்தை மேலும் பலப்படுத்துவதோடு மட்டுமின்றி, கழகங்களின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிடக்கோரி,
ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிடக்கோரி,
ஊதிய வஞ்சனையை சரி செய்திட,
புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட,
பணி ஓய்வின் போதே ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியப்பலன்களை வழங்கிட
ஊதிய ஒப்பந்தத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தை உயர்த்திட
தொழிலாளர்கள் பணம் ரூ.8000 கோடியை திரும்ப வழங்கிடக்கோரி
மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை மேம்படுத்த விபத்தை குறைக்க, போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த, சுற்றுப்புற சூழலை பாதுகாக்க - பொதுப்போக்குவரத்தைப் பலப்படுத்த பல்வேறு தீர்மா னங்களை நிறைவேற்றி மாநாடு தொடர் போராட்டங்க ளுக்கு திட்டமிட உள்ளது. சம்மேளன மாநில மாநாட்டின் முத்தாய்ப்பாக 23.07.2019 அன்று திருநெல்வேலியில் மாலை நடை பெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக் கான போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத் தினருடன் பங்கேற்று, மாநாட்டை வெற்றி பெற செய்வோம்.