tamilnadu

தேனியில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேனி, மே 14- இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்திய மாநில அரசின் நடவடிக்கையை கண்டித்து தேனி மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஈரத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவ ட்டச் செயலாளர் சி.முனீஸ்வரன் தலை மை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.காரல் மார்க்ஸ், தாலுகா தலைவர் முத்துக்குமார், தாலு காச்செயலாளர் பெத்தலீஸ்வரன், இந்திய மாணவர் சங்க மாவட்டச்செயலா ளர் டி.நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.ஆர்.லெனின் தலைமை வகித்தார். ஏரியா நிர்வாகிகள் பிரக தீஸ்வரன், மணிஅரசன், காலித், பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஜி.ராஜேஸ் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் கே.ஆர்.லெனின், ஏரியா நிர்வாகி பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பி.டி.ராஜா தலைமை வகித்தார். மாவட் டக்குழு உறுப்பினர் காளிச்சாமி, ஜெய காந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;