தேனி, அக். 5- தேனி மாவட்டம் போடி சிலமலை கிராமத்தை சேர்ந்தவர் மணியம்மாள் (55). இவர் கணவர் பாண்டி மற்றும் பேத்தியுடன் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுதாகர் (24). இவர் மணியம்மாள் வீட்டிற்கு செல்போனுக்கு சார்ஜ் போடுவதாகக் கூறி அடிக்கடி சென்றுள்ளார். இந்நிலையில் வியாழக் கிழமை மாலையில் பேத்தி யின் சத்தம் கேட்டு மணி யம்மாள் சென்று பார்த்த போது சுதாகர், சிறுமியை சில் மிஷம் செய்தது தெரிந்தது. இதுகுறித்து மணி யம்மாள் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து வெள்ளிக்கிழமை சுதாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.