tamilnadu

பெரியகுளத்தில்  பெண் தற்கொலை

 தேனி, மார்ச் 1- பெரியகுளத்தில் திருமணம் தடை பட்டு மகள் காப்பகத்தில் இருந்ததால் மன முடைந்து  தீக்குளித்த தாய்  சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக, போலீசார்  சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள் ளனா். பெரியகுளம், வடகரையைச் சோ்ந்த சக்திவேல் மனைவி சூரியா (33). இவ ருக்குத் திருமணமாகி 2 மகள்கள் உள்ள னா். தனது சகோதரனுக்கு  இரண்டா வது மகளை குறைந்த வயதில் திரு மணம் செய்து  வைக்க முயன்றுள்ளார். இந்த விவகாரத்தில் வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டு மகளை காப்பகத்தில் இருந்து ளளார் . இந்த   பிரச்னையால் சூரியா மன வருத்தத்தில் இருந்துள்ளார். .இந்நிலை யில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (23ம் தேதி) வீட்டில் தனியாக இருந்தபோது, சூரியா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி சோ்த்துள்ளனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சூரியா சனிக்கிழமை உயிரிழந்தார்.   இச்சம் சவம் குறித்து, பெரியகுளம் போலீசார்   வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

;