tamilnadu

பேருந்தில் சென்ற போது கீழே விழுந்து புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு

தேனி, மே 24- தேனி மாவட்டப் பகுதி களிலிருந்து மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 688  புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சனி க்கிழமை, மதுரை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேவதானப்பட்டி அருகே பேருந்தில் சென்ற போது தவறி கீழே விழுந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரி ழந்தார். தேனி மாவட்டத்தி லிருந்து மகாராஷ்டிர மாநி லத்தைச் சேர்ந்த 688  தொழிலாளர்கள் சொந்த  ஊர்களுக்குச் செல்வ தற்காக 21 பேருந்துகள் மூலம் மதுரை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்கள்  மகாராஷ்டிர மாநி லத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தவறி விழுந்த தொழிலாளி பலி
தேவதானப்பட்டி முகாமிலிருந்து சிவாஜி ராம் என்பவர் தனது குடு ம்பத்துடன் பேருந்தில் மதுரை ரயில் நிலை யத்திற்கு புறப்பட்டார் .அப்போது தேவ தானப்பட்டி செங்குளம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து பலியானார்.