tamilnadu

img

சாலை அமைக்கும் பணி கிராமமக்கள் போராட்டம்

கடமலைக்குண்டு, ஜூலை 1- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே கருப்பையாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே அமைந் துள்ள சுக்கான் ஓடையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.  புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் அருகே கருப்பையாபுரம் கிரா மத்திற்கு மின்சாரம் வழங்க மின்மாற்றி அமைந்துள்ளது. பாலம் கட்டும் பணிகள் முடி வடைந்து அந்தப் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்தப் பணி காரணமாக மின்மாற்றி அமைந்துள்ள பகுதி மணல் கொட்டி உயர்த்தப்பட்டது. இதனால் மின்மாற்றியின் உயரம் குறைந்தது. எனவே மின்மாற்றியை உயர்த்தி அமைத்து அதன்பின்னர் சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். மின்மாற் றியை உயர்த்தி அமைக்காமல் சாலை அமைக்கும் பணிகள் புதனன்று நடைபெற் றது. இதையடுத்து கருப்பையாபுரம் மக்கள் திரண்டு சாலை அமைக்கும் பணியை நிறுத்தி னர். இதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில்  செம்மண் சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்த பின் மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு   அதன் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கும் என பணியா ளர்கள் தெரிவித்தனர்.

;