tamilnadu

img

தேனி ஆட்சியரின் அலட்சியப் போக்கால் இடமாறுதலில் செல்லும் திறமையான அதிகாரிகள்

தேனி ,மே.30- தேனி ஆட்சியர் பல்லவி பல்தே வின் அலட்சியப் போக்கு காரணமாக திறமையான ஐஏஎஸ் அதிகாரி உட்பட திறமையான அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் வாங்கி சென்றுவிட்டனர். தற்போது வருவாய்த்துறை ஊழியர்கள் மன உளைச்சலில் தவித்துவருகின்றனர் தேனி மாவட்டத்தில் கடந்த  இரண் டரை ஆண்டுகளாக  மாவட்ட ஆட்சிய ராக இருப்பவர் பல்லவிபல்தேவ். நீண்ட  நாட்களாக வணிகவரித் துறையில்  பணியாற்றி முதன் முறை யாக  தேனியில்  மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் கடுமையான அதிகாரி போல் காட்டி கொண்டார்.  காலம் உருண்டோட மாவட்ட அதிகாரிகள் கூறும் கருத்துக்களை செவிமடுக்காமல் அவர்களை நிற்க வைத்துப் பேசி அவமதிப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதால் திறமைவாய்ந்த அதிகாரிகள் இவற்றை சகிக்க முடியாமல் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை வருவாய்த் துறை தலைமை அலுவலகத்தில் நிலப்பிரிவில் பணியாற்றி அனுபவம் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்  கந்தசாமி, மருத்துவராக இருந்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சமூகப் பொறுப்புடன் செயல்பட்ட உத்தமபாளையம் சார் ஆட்சியர் வைத்தியநாதன் ஆகியோரை அவமதித்ததால் அவர்கள் வேறு மாவட்டத்திற்கு சென்று விட்டனர்.  போல மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் செந்தில் குமார், தாட்கோ மேலாளராக இருந்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பொறுப்பையும் கவனித்து வந்த முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் இடமாறுதலில் சென்று விட்டனர் . கொரோனா தடுப்பு நடவடிக்கைளையும் குமுளி, கம்பம் மெட்டு,போடி மெட்டு ஆகிய வழிக ளில் வரும் வெளிமாநிலத்தை சேர்ந்த வர்களை கண்காணித்து  உத்தரவு களை பிறப்பிக்க கூடிய இடத்தில் உள்ள பாளையம் கோட்டாட்சியர்   பணியிடம் கடந்த ஏழு மாதங்க ளுக்கும் மேலாக காலியாக உள்ளது.

மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், மிக முக்கியமான பணியிடமாக உள்ள சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சி யர் பணி, பட்டியல் இனத்தவர்க ளுக்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் தாட்கோ மேலாளர் பணியிடம் உள்ளிட்டவை காலியாக உள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் தேனி மாவட்டத்தில் பணியேற்க அதிகாரிகள் தயங்கி வருகிறார்கள். இங்கு வேலை பார்ப்ப தற்கு பதில் தண்டனை இடமாக கருதப்படும் இராமநாதபுரம் மாவட்டமே  மேல் என்கிறார்கள் . மாவட்ட ஆட்சியரின் செயல் பாட்டுக்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ள லாம். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மை  பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் தேனி மாவட்டத்தில் உள்ள 4800 தூய்மை பணியாளர்களுக்கு ரூ 48 லட்சத்தை ரூபாய் ஆயிரம் வீதம் தனித்தனி கவரில் வைத்து கொடுக்கச் சொல்லி தேனி ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.

அந்தப் பணத்தினை கருவூலத்தில் செலுத்தி  20 நாட்களுக்கு பிறகு காசோலை தயார் செய்து தூய்மைப்  பணியாளர்களிடம் வழங்கினார். அந்த நேரம் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டது .பின்னர் குறைந்த ஊதியம் பெரும் தூய்மைப்பணியா ளர்களில் பெரும்பாலானோர்  வங்கி கணக்கில் அந்தத் தொகை செலுத்தப்பட்ட உடன் கடனுக்கு பிடித்து விட்டனர். பலர் காசோலை யை குறைந்த விலைக்கு விற்றனர். இது போன்று தான் கையெழுத் திற்காக வைக்கப்படும் பைல்கள் நாள் கணக்கில் தூங்கும். வருவாய்த்துறையினர் மேற்பார்வை செய்யும் பணிகளை தனக்கு வேண்டிய வேறு துறை அலு வலர்களை கொண்டு மேற்பார்வை செய்யும் நடவடிக்கை வருவாய்த் துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் வருவாய்துறை யின் சார்பில் நடத்தப்படும் கல் குவாரி ஏலத்தை வருவாய்த்துறை அலு வலர்களைக் கொண்டு நடத்தாமல், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறி யாளர் கவிதாவை கொண்டு நடத்தி னார்.

பெரியகுளம் சார் ஆட்சியர் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியில் அவரை அவமதிக்கும் வகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு நிய மிக்கப்பட்ட டிஆர்ஓ வை நியமிப்பது போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள் ளார்.   தமிழக கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்பணி காரண மாக, மன உளைச்சலுக்கு ஆளாகி, உடல் ரீதியாக கடுமையாக பாதிக் கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் குமுறுகிறார்கள். குமுளி,போடி மெட்டு மற்றும் கம்பம் மெட்டு  ஆகிய தமிழக - கேரள எல்லை யில் அமைந்துள்ள சோதனைச்சாவ டியில் பணியில் உள்ள வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஓய்வு இல்லாமல் தொடர் பணி வழங்கப் பட்டுவருகிறது.  கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வோ, விடுப்போ இல்லாமல் தொடர் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இது குறித்து தேனி ஆட்சியரிடம் முறையிடச் சென்றால், எங்களை சந்திப்பதே இல்லை. அதையும் மீறி  மனுக் கொடுத்தால், மனு கொடுப்பவ ருக்கு பணி இடமாறுதல் உள்ளிட்ட  பல இன்னல்கள் வருவதாக தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராம லிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

-நமது நிருபர்