tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு ஆயுள் தண்டனை

 தேனி, ஏப். 17- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. தேனி, பழைய டி.வி.எஸ். சாலை பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை(64). இவரது மகன் வீடு தேனி பாரஸ்ட் சாலை பகுதியில் உள்ளது.அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த 2017 மே மாதம் சிறுமியின் தாயார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், செல்லதுரை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி திலகம், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செல்லதுரைக்கு ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

;