tamilnadu

பெரியகுளத்தில் ரூ.5 லட்சம் கொள்ளை...  

தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரண்மனைதெருவை சேர்ந்தவர் கருணாகரன்.இவர் மருத்துவத்துறையில் இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார் . இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டநிலையில் கடந்த 8-ஆம்தேதி பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 17-ஆம் தேதிவீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 1/2  பவுன் நகைகள், ரொக்கம் ரூ.1.50 லட்சம் ,லேப்டாப் , கடிகாரம்,எல்இடி டிவி உள்ளிட்டரூ 5 லட்சம் பெறுமான நகைபணம் கொள்ளை போனதாக , கருணாகரன்  பெரியகுளம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். சார்பு ஆய்வளர் ஈஸ்வரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

;