tamilnadu

பணம் கேட்டு மிரட்டல்: ஊராட்சி முன்னாள் தலைவர் தற்கொலை முயற்சி

தேனி, ஜூன் 7- தேவாரம் அருகே தவறாக பழகிய தாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த ஊராட்சி முன்னாள் தலை வர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உட்பட இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் திருப்பதிவாசகன் (47). இவர் 18-ஆம் கால்வாய் விவசாயிகள் சங்க செயலாளராகவும், தமிழக அனைத்து விவ சாயிகள் சங்க கூட்டமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வரு கிறார். இவர் கடந்த 2006-2011 ஆம் ஆண்டு டி.ரெங்கநாதபுரம் ஊராட்சித் தலை வராக இருந்துள்ளார். இதே காலகட்டத்தில் பக்கத்து கிராமமான பொட்டிப்புரம் ஊராட்சி மன்ற தலைவராக திம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுருளியம்மாள் இருந்துள்ளார்.

இரு வரும் ஊராட்சித் தலைவர்கள் என்ற முறை யில் வெளியூர்களுக்கு கூட்டங்களுக்கு சென்றபோது சந்தித்துப் பேசியுள்ளனர்.பத்து ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சுருளியம்மாளிடம் திருப்பதிவாச கன் தவறாகப் பழகியதாகவும், அதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் வெளி யில் சொல்லி அசிங்கப்படுத்துவதாகவும் கூறி சுருளியம்மாள், இவரது கணவர் மலைச்சாமி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன திருப்பதிவாசகன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அவர் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். திருப்பதிவாசகன் மனைவி லாலி (41) தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறை யினர் மலைச்சாமி மற்றும் சுருளியம்மாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.