tamilnadu

சிறுமிக்கு கட்டாய திருமணம் 

தேனி:
தேனி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்ததாக கணவர் உட்பட 12 பேர் மீது தேனி மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேனி அருகே தென்றல் நகரில் 27 வயது வாலிபர் அருண் பாண்டி என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிறுமியை அவரது உறவினர்கள் கட்டாய திருமணம் செய்துவைத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்த அருண்பாண்டி அவரது தாய், தந்தை உட்பட 11 பேர் உடந்தையாக இருந்ததாக தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித் தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த சார்பு ஆய்வாளர் சுமதி, இது
தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

;