tamilnadu

பெண் சார் பதிவாளர் குடும்பத்தை வாகனம் ஏற்றி கொலை செய்ய முயற்சி

தேனி:
முன்விரோதம் காரணமாக சார் பதிவாளரின் கணவர் மற்றும்அக்கா மகன்களை காரை வைத்துஅடித்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட வழக்கறிஞரை ஆண்டிபட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் தினேஷ் (35). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உஷாராணி. இவர் ஆண்டிபட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணி
புரிந்து வருகிறார். ஆண்டிபட்டிஅருகே உள்ள மணியாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(45).இவர் வழக்கறிஞராக உள்ளார். வழக்கறிஞர் கணேசன் கடந்த 24-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியிலிருந்து வந்த சார் பதிவாளர் உஷாராணியை அழைத்து தனக்கு சதகமாக பத்திரத்தை முடித்துத் தருமாறு கேட்டுள்ளார். சார் பதிவாளர் உஷாராணி சட்டப்படிதான் பத்திரம் பதிவு செய்வேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் கணேசன் உஷாராணியின் கணவர் தினேஷூக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்வாய்க்கிழமை  மாலை ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சார் பதிவாளர் உஷாராணியின் கணவர் தினேஷ், தினேஷின் அக்கா மகன்கள் நிதிஷ்குமார், கவியரசன் ஆகிய மூவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த வழக்கறிஞர் கணேசன் தமது காரால்மோதி சார் பதிவாளர் உஷாராணியின் குடும்பத்தை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற மூவரும் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.